Thursday, February 26, 2015

கரடு முரடான வாழ்க்கைப்பாதை ............



கருவாகி தாயின் வயிற்றிலே உருவம் பெற்றோம்.பிறந்தோம் வாழ்க்கையின் அடுத்த நொடி பற்றி சிந்திக்க தேவையில்லை .நமக்காக அனைவரும் . ஏன் தெருவில் நிற்பவர்கள்  கூட . மழலை மொழி கேளான் மூடன் என்றான் பாரதி .மழலையை கொஞ்சாதார் யாருமில்லர். மழலையாக எமது பயணம் தொடரும். நாட்கள் செல்லும். நாங்களும் வளருவோம்.வயதிட்கேட்ப  சுமைகளும் கூடும். பொருளாதரத்திற்கு ஏற்ப கல்வி.இப்போதெல்லாம் அதுவும் விற்பனை.ஒரு வழி தப்பியவாறு சமூகத்தை சேருகின்றோம். ஆரம்பமாகிறது எதிர்நீச்சல். மீண்டும் மழலையாக வாழ்க்கையை பயின்றவாறு ஆனால் இங்கு சற்று பயத்துடனேயே ......

ஆனால் புத்தகப்படிப்பை விட சற்று சுவாரஷ்யமாக இருக்கும். வாழ்க்கையோ எங்களுக்கு ஒவ்வொன்றையும் அணுவணுவாக பிரித்து சொல்லித்தரும். சிலவேளை  இனிப்பாகவும் சில வேளை கசப்பாகவும் நாட்கள் நகரும்.ஆனால்  இவைகளை உணருமுன் காலம் கடந்து விடும்.இயற்கையின் நியதியும் அதுவே.உலகமேன்பதோ  நாடக மேடை அதில் நாமெல்லாம் நடிகர்களாக  வளம் வருவோம்.இதற்குள் அன்பு, பாசம், காதல் எனும் காட்சிகளும் அரங்கேறும். அறிந்தோ அறியாமலோ உலக மாயையில் சிக்கியவாறே.....

பரவாயில்லை அதுவும் அதனை கடந்து செல்பவர்களுக்கு மட்டும்தானே.பிரச்சினைகள் எல்லோருக்குமல்ல. பிரச்சினைகளை தேடி செல்பவர்களுக்கு  மட்டுமே என்பது எனது சொந்த கருத்து 




Wednesday, February 25, 2015

என்று எம்மனதை விட்டு நீங்காத நாகூர் E.M ஹனிபா



தோன்றிப் புகழோடு தோன்றுக அ ஃதிலார் தோன்றலில்  தோன்றாமை நன்று அடிக்கடி இல்லாவிடினும் சில நேரங்களிலாவது இஸ்லாமிய கீதங்களை கேட்கும் வழக்கமுடையவள் என்பதால் தோன்றியது இந்த ஆக்கம் அந்த பாடல்களை கேட்டு கொண்டிருந்தபோது பாடியவரை பற்றி யோசிக்க தோன்றியது . வரலாற்றை புரட்டி படிக்க தேவையில்லை.எல்லாமே கவி வரிகளாக.அப்பாடல்களில் ஈர்கப்படாதவர்கள்  இருக்க முடியாது. சிறுவர்கள் முதல் பெரியோர் வரை அவரை மறந்திருக்க முடியாது.

இஸ்லாம் இசையை வெறுக்கிறது என்பதென்னவோ உண்மைதான் . ஆனால் இவர் தந்த இஸ்லாமிய கீதங்களோ  எங்களை மார்கத்தின்பால் சிந்திக்க வைக்கும் வல்லமை படைத்தது .யாரும் அநுபவத்தில் உணர்ந்திருப்பார்கள்.
இசை எங்களை மெய் மறக்கச்செய்யும்.இதனால் இசை இஸ்லாத்தில் வெறுக்கபட்டிருக்கலாம் .இது இசை பற்றி எனது சொந்த கருத்து.

ஞானத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா?





இவ்வாறு சிறப்பான பல பாடல்களை தந்த அன்னாருக்கு இறைவன் அன்னாரின் தவறுகளை மன்னித்து  ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை கொடுப்பானாக .ஆமீன் 

வாழ்க்கையில் வெற்றி என்பது அதிஷ்டவசமா? இல்லை முயற்சியின் பலனா ?



வாழ்க்கையில் வெற்றி என்பது அதிஷ்டவசமா ? இல்லை முயற்சியின்  பலனா ? யாருக்கும் தெரியாது.எதோ எமது சிந்தனைக்கு எட்டியவரை தெளிவாகவும் சில வேளைகளில் குழப்பமாகவும் ஓடிக்கொண்டிருக்கும் . ஆனால் வெற்றி தோல்விகளோ  தேர்தல் முடிவுகள் போல் குழப்பமானவை அல்ல. பரீட்சை முடிவகள் போல் தீர்க்கமானவை.

அண்மையில் முகப்புத்தகத்தில்  ஒரு பதிவை வாசிக்க முடிந்தது ."பெற்றோர் எதிர்காலத்தில் சிறப்பாக வாழவேண்டும் என்றால் நன்றாக படிக்க வேண்டும் என்றனர் .அனால் படித்தாலோ காலை எட்டு மணி முதல் மாலை  எட்டு மணி வரை எங்களால் ஓய்வாக இருக்க முடிவதில்லை . தொழில் என்று எம்மை தியாகம் செய்ய வேண்டிய சூழ்நிலை".பல்வேறு இன்னல்கள் எனினும் சிறப்பான வாழ்க்கை. பணம் எதற்கு என்று எம்மால் கேட்க முடியாது. பணம்தான் வாழ்க்கை என்று சூழ்நிலை கைதிகளாக சில வேளைகளில்  நடைபிணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் . சில வேளைகளில் பெற்றோர் சகோதர்கள் கூட பணம்  என்றால்தான் எங்களை மதிக்கும் சூழ்நிலை இன்று ........... ஒரு பிரபலமான பாடல் வரி நினைவுக்கு வருகிறது .

மேடையே வையகம் ஒரு மேடையே
வேஷமே   அங்கெல்லாம் ஒரு வேஷமே 
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே

ஆனால் தெளிவான உண்மை கஷ்டபட்டாதான் நன்றாக வாழ முடியுமென்பது. அதனையே பாரமாக நினைத்தால் எம்மால் கல்வி ,செல்வம் என்று சந்தோசமாக வாழமுடியாமல் பொய் விடும். ஒவ்வொருவரது வாழ்க்கை வெற்றியும் வேறு பட்டது. அடுத்தவர்களின் வெற்றி போல் எமது வெற்றி அமையாது . 

எதை எடுத்துகொண்டாலும் வாழ்கையில் தேர்வு மிக முக்கியமானது.நாங்கள் எதிர்காலத்தில் எவ்வாறு வாழப்போகிறோம் . எதிர்காலத்தில்  என்ன தொழில் செய்ய போகிறோம் என்பது எம் கைவசம்தான் இருக்கிறது .

நாங்கள்தான் அதை தீர்மானிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம்.பெற்றோர் அல்ல.ஆனால்  பெற்றோர் சில வேளைகளில் எம்மேல் திணிப்பது சில வேளைகளில்சாதகமாகவும் பல வேளைகளில்  பாதகமாகவும் அமைந்து விடுகிறது. சாதகமாக அமையும் போது நாம் அதனை பெரிதுபடுத்துவதில்லை. ஆனால் பாதகமாக அமையும் போது  எமது எதிர்காலம் சூனியமாகி விடும்.

வேலை தேடும் பலரை நாம் கடந்திருப்போம். ஒரு சிலரே தாங்கள் படித்த துறையில் வேலையை பெற்று இவ்வுலகத்திற்கு அவர்களை நிரூபித்து இருக்கிறார்கள். வேலை தேடும் பலர் சொல்லும் ஒரு வார்த்தை " எந்த வேலை என்றாலும் பரவாயில்லை".மிக முக்கியமான விடயம் எதை நாங்கள் அடைய வேண்டும் என்பது.அதில் நாங்கள் தெளிவாக இருந்தால்தான் எமது இலட்சியத்தை அடைய முடியும். நமக்கு எது வேண்டும் என்ற தெளிவு இருந்தால்தான் அது கிடைக்கும். கிடைத்தால் ருசிக்கும். இல்லையென்றால் கிடைக்காது. கிடைத்தாலும் ருசிக்காது. காரணம் கிடைத்ததே தெரியாது.

முயற்சி மிகவும் முக்கியம் அதிஷ்டம் அதை விட முக்கியம் . தெரிவு மிக மிக முக்கியம். இதனை புத்தகங்களில் கற்க முடியாது. வாழ்கையில் அனுபவ பாடத்தை  கற்கும் போது எங்களால் உணர முடியும்.





Sunday, February 22, 2015

POSITIVE THINKING


Positive thinking is a mental and emotional attitude that focuses on the bright side of life and expects positive results.A positive person expect happiness, health and success, and believes he or she can overcome barrier and difficulty.Positive thinking is not accepted by everyone. Some, consider it as nonsense, but there is a growing number of people, who accept positive thinking as a fact, and believe in its effectiveness.To use it in your life, You should have a  attitude of positive thinking in everything you do.

How Positive Thinking Works

A small story for an example  how this power works:

A boy who applied for a new job, but he didn't believe he will get it, since his self-esteem was low, and he considered himself as a failure and unworthy of success.He had a negative attitude toward himself, and therefore, believed that the other applicants were better and more qualified than him.His mind was occupied with negative thoughts and fears concerning the job, for the whole week preceding the job interview. He actually, expected failure.On the day of the interview, he got up late, and to his horror he discovered that the shirt he planned to wear was dirty, and the other one needed ironing. As it was already too late, he went out wearing a wrinkled shirt and without eating breakfast.During the interview, he was tense, negative, hungry and worried about his shirt. All this, distracted his mind and made it difficult for him to focus on the interview. His overall behavior made a bad impression, and consequently, he materialized his fear and did not get the job.


Another Boy also applied for the same job too, but approached the matter in a different way. He was sure that he was going to get the job. During the week preceding the interview, he often visualized himself making a good impression and getting the job.In the evening before the interview, he prepared the clothes he was going to wear, and went to sleep a little earlier. On day of the interview, he woke up earlier than usual, and had ample time to eat breakfast, and then to arrive to the interview before the scheduled time.He made a good impression and got the job.

What do we learn from these two stories? Was there any magic used? No, everything happened in a natural way. only Because of positive thinking.

Think positive Talk positive Feel positive